2014-ஆம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கை யில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கு வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரது கடந்த 10 வருட ஆட்சிக் காலத்தில் மொத்தமாக 2 கோடி பேருக்கு கூட ஒன்றிய அரசு வேலை வழங்க வில்லை. வேலை கேட்டால், பக் கோடா விற்ற பிழைக்க சொல்கிறார் மோடி. இதனால் நாட்டில் வேலை யில்லா திண்டாட்டம் படுமோச மாக உள்ள நிலையில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத் தில் வெறும் 60,000 போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு 48 லட்சம் பேர் குவிந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதிக தேர்வாளர்கள் குவிந்ததால் 2 கட்டமாக தேர்வு
உத்தரப்பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான எழுத்து தேர்வு பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றன. உத்த ரப்பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் படுமோசமாக உள்ள தால், கான்ஸ்டபிள் தேர்வுக்கு இது வரை இல்லாத வகையில், 48 லட் சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து இருந்தனர். 48 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்த உத்தரப்பிரதேச பாஜக அர சிடம் போதிய வசதிகள் இல்லாத தால் தான், தேர்வை பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடத்துவதாக அறிவித்தது.
கான்பூர் ரயில்நிலையத்தில் கடும் நெரிசல்
முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வு சனியன்று நடைபெற்ற நிலையில், தேர்வில் கலந்து கொள்ள வெள்ளியன்று நள்ளிரவு முதலே உத்தரப்பிரதேச மாநில ரயில் மற்றும் பேருந்து நிலையங்க ளில் தேர்வாளர்கள் குவிந்தனர். இத னால் திருவிழா காலங்களை போன்று மாநிலத்தின் அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங் களும் கடுமையான கூட நெரிச லில் சிக்கியது.
முக்கியமாக நாட்டின் மிகப் பெரிய ரயில் நிலையங்களில் ஒன் றான கான்பூர் ரயில் நிலையத்தில் மெக்காவின் “ஹஜ்” யாத்திரை யில் காணப்படும் அளவிற்கு நெரி சல் இருந்தது. அதாவது தேர்வா ளர்கள் மட்டுமே ரயில் பயணம் மேற்கொண்டார்கள். மற்ற பயணி கள் சனியன்று காலை வரை காத்தி ருந்து பயணம் மேற்கொண்டனர்.
மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையால் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந் துள்ள இந்த சம்பவம் நாடு முழுவ தும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அர சியல் மற்றும் அனைத்து தரப்பின ரும் மோடி அரசிற்கு கடும் கண்ட னம் தெரிவித்து வருகின்றனர்.